தமிழ்நாடு

சேலம் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

webteam

சேலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் அரியானூர் அருகே இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரில், தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த நிர்மல்குமார் என்ற மாணவர் பிசியோதெரபி துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ள்ளார்.

இவர் வீரபாண்டியில் உள்ள விடுதி ஒன்றில் சக மாணவர்களோடு அறை எடுத்து தங்கி பயின்று வந்துள்ளார்.  நேற்றிரவு மாணவர் நிர்மல்குமார் வழக்கம்போல் நண்பர்களுடன் பேசிவிட்டு தனது அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அவரின் அறையின் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியே பார்த்தபோது அவர் தூக்கிட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவன் நிர்மல் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.