தமிழ்நாடு

மயிலாடுதுறை: முகக்கவசம் அணிந்து புத்தாண்டு பூஜையில் கலந்து கொண்ட நாய்!

kaleelrahman

புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் குதிரைகள், பசுக்கள் மற்றும் நாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாய் மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்து அசத்தியது

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வன துர்க்கை அம்மன் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டும் உலக நன்மை வேண்டியும், 108 பசுக்கள், 108 குதிரைகள், 18 காளை மாடுகள், 18 நாய்கள் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட நாய் ஒன்று முகக்கவசம் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து வந்து அசத்தியது.