தமிழ்நாடு

அரசு வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - மாரியப்பன்

Sinekadhara

தனக்கு அரசு வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என மாரியப்பன் தங்கவேலு கூறியிருக்கிறார். 

பாராலிம்பிக்கில் வெள்ளிவென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு குரூப்- 1 பணிக்கான அரசு வேலையான காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று பணிநியமன ஆணையை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து மாரியப்பன் தங்கவேலு, எனது கோரிக்கையை ஏற்று முதல்வர் அரசுவேலை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.