தமிழ்நாடு

பீட்டாவுக்கு பாடை கட்டிய மாணவர்கள்

webteam

சென்னை மெரினாவில் பீட்டாவுக்கு பாடை கட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும், பீட்டா அமைப்பு தடை விதிக்க வேண்டியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னையில் இளைஞர்கள் நேற்று தொடங்கிய போராட்டத்துக்கு நொடிக்கு நொடி ஆதரவு பெருகி வருகிறது. போராட்டத்தால் மெரினா கடற்கரை ஸ்தம்பித்துள்ளது. இந்தநிலையில், பீட்டாவுக்கு பாடை கட்டி இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.