தமிழ்நாடு

மானசரோவர் புனித யாத்திரை மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் - அறநிலையத்துறை அறிவிப்பு

Sinekadhara

சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்தவர்கள் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரையான காலத்தில் புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக நிறைவு செய்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதற்கு தகுதிபெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhrce.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து சான்றுகளையும் வரிசைப்படி இணைத்து பக்க எண்ணிட்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.