தமிழ்நாடு

மானாமதுரை: ப.சிதம்பரத்துடன் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் பதவி பறிப்பு

மானாமதுரை: ப.சிதம்பரத்துடன் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் பதவி பறிப்பு

Veeramani

சிவகங்கையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை அருகே கடந்த 11ஆம் தேதி நடந்த காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ப.சிதம்பரத்துடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தற்போது அவரது பதவி பறிக்கப்பட்டதோடு, விளக்கம் கேட்டு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூட்டத்தில் மற்றவர்களை பேசவிடாமல் இடையூறு செய்து ஒழங்கீனமாக நடந்துகொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது விளக்கத்தை அளிக்க தவறும் பட்சத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.