தமிழ்நாடு

இறுதிச் சடங்கில் உயிருடன் இருந்த நபர்: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்

Rasus

இறந்ததாக கருதப்பட்ட நபர் இறுதிச் சடங்கு செய்யும்போது உயிர் பிழைத்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சுலைமான் நகரைச் சேர்ந்தவர் தங்கையன். திடீர் நெஞ்சுவலி காரணமாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கை விரித்ததால், உறவினர்கள் தங்கையனை ஆம்புலன்ஸ் மூ‌லம் கறம்பக்குடிக்கே கொண்டு சென்றனர். தங்கையன், ஆம்புலன்சில் சுயநினைவை இழந்து அசைவற்று கிடந்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி, அவரது உடலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைத்தனர். உறவினர்கள் அனைவரும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியபின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை செய்ய முற்பட்டபோது, தங்கையன் உடலில் அசைவு இருந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விரைந்து செயல்பட்ட கிராம மக்கள், தங்கையனை உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.