தமிழ்நாடு

பெரம்பலூரில் போலி குடும்ப அட்டைகள் தயாரித்தவர் கைது

webteam

பெரம்பலூரில் மாவட்ட வழங்கல் அலுவலரின் கடவு எண்ணை பயன்படுத்தி போலி குடும்ப அட்டைகள் தயாரித்து வழங்கிய பொது சேவை மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் பெரம்பலூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுச் சேவை மையம் நடத்தி வந்துள்ளார். இதன் மூலமாக, வட்டாட்சியர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலரின் கடவு எண்ணைப் பயன்படுத்தி போலி குடும்ப அட்டைகளை தயாரித்து வந்தது தெரியவந்ததை அடுத்து, ராஜா கைது செய்யப்பட்டார்.