தமிழ்நாடு

முதிய தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற விவகாரம்: முக்கிய நபர் கைது

webteam

கடையம் அருகே முதிய தம்பதிகளை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற விவகாரத்தில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள் ளார்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர், வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த முதியவர் சண்முகவேல் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, அவரும் அவரது மனைவி செந்தாமரையும் இணைந்து கொள்ளையர்களை துணிச்சலுடன் தாக்கினர். இதில் நிலைகுலைந் து போன கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறை யினர் விசாரணை நடத்தி வந்தனர். 

கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், கொள்ளையர்களை விரட்டியடித்த, அவ்விருவரின் வீரதீரச் செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். அந்த தம்பதிக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பழைய குற்றவாளி என்று கூறப்படுகிறது. மற்றவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.