தமிழ்நாடு

இலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் மகிந்த ராஜபட்ச

rajakannan

இலங்கை நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நாளை பதவியேற்கிறார்.

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கே பெரும்பான்மை இருப்பதால்,  புதிய அரசை நடத்திச் செல்வதில் பொதுஜன முன்னணிக்கு சில சவால்கள் இருக்கும் என கூறப்பட்டது. 

இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ராஜினாமாவைத் தொடர்ந்து, முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபட்ச பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. நாளை மதியம் ஒரு மணியளவில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.