தமிழ்நாடு

நாடகம் விரைவில் முடியும்: மஃபா பாண்டியராஜன்

webteam

நாடகம் முடியும் நேரம் நெருங்குகிறது என்று அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

நேற்று வரை சசிகலா அணியில் இருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்குச் சென்று அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த பட்சம் 20 எம்எல்ஏக்களுடன் தான் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்படவில்லை என நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது தங்களுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் பாண்டியராஜன் கூறினார்.