தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு

webteam

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக அவைத்தலைவர் பதவி அதிகாரமிக்க பதவியாகக் கருதப்படுகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஜெயலலிதா தனக்குப் பிறகு அவைத்தலைவர் மதுசூதனனையே பொதுச்செயலாளராக்க விரும்பியதாகத் தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மூத்த நிர்வாகிகள் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினால் அதை நிறைவேற்றும் கடமை தமக்கு உண்டு என்றும் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மதுசூதனன் வருகை தந்து நேரில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.