இளைஞர்கள் கொலை pt desk
தமிழ்நாடு

மதுரை | 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் கொலை - பொதுமக்கள் அச்சம்

மதுரையில் 24மணி நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை மாவட்டம் சிலைமான் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் அழகர்சாமி. கூலி வேலைக்குச் சென்றுவந்த அழகர்சாமி, மது போதைக்கு அடிமையான நிலையில், நேற்று இரவும் போதையில் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் அழகர்சாமியின் வீட்டின் கதவை தட்டிய மர்ம கும்பல் அவரை வெளியே அழைத்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த சிலைமான் காவல்துறையினர் அழகர்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் நேற்று மாலை சிக்கந்தர்சாவடி பகுதியைச் சேர்ந்த கமலேஷ் என்ற இளைஞர், சாலையில் வைத்து பொதுமக்கள் நடமாடும் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். மதுரையில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. குற்றச் செயல்களின் ஈடுபடுபவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.