Fire accident
Fire accident pt desk
தமிழ்நாடு

மதுரை: நகைக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - மூச்சுத் திணறி ஒருவர் உயிரிழப்பு

webteam

மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடிகளை கொண்ட இந்த கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதால், உள்ளே இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.

jewellery shop

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையே, கடையின் 3 ஆவது தளத்தில் கழிவறையில் சிக்கி இருந்த மோதிலால் என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.