தமிழ்நாடு

சிறார் ஆபாச படங்கள் பகிர்ந்த மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது

webteam

சிறார் ஆபாச படங்கள் பகிர்ந்த மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது, அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை என அடுத்தடுத்து பல இடங்களில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வரும் குமார் என்ற இளைஞர் சமூகவலைதளம் மூலம் சிறார்களின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அனைத்து மகளிர் காவல் துறையினர் குமாரை கைது செய்து அவர் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறார் ஆபாச படங்களை பரப்பியது தொடர்பாக செந்தில்குமார்(31) என்பவரையும், ஆபாச வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக சுந்தரபாண்டியன் என்பவரையும் மதுரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் இரண்டு நாட்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது