தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம்

PT


உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இணை ஆணையராகப் பணியாற்றியவர் நடராஜன். கடந்த 2014 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட இவர் கடந்த 8 வருடங்களாக மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது சேலம் மண்டல அறநிலையத் துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையராக திருவேற்காட்டில் பணியாற்றி வந்த செல்லத்துரை என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்து சமய அறநிலையத் துறையில் அதிகாரிகள் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது நடராஜன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடர்ந்து 8 வருடம் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.