தமிழ்நாடு

நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்: மதுரை மாநகராட்சி

நிவேதா ஜெகராஜா

நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மதுரை மாநகராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கல்வித்குதி சான்றிதழ்களுடன் அறிஞர் அண்ணா மாளிகை மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

10 நகர்ப்புற ஆரம்ப சுதாரார செவிலியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், மாத ஊதியமாக 11,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.