தமிழ்நாடு

மதுரை: சட்ட விரோத குழந்தைகள் விற்பனை வழக்கில் காப்பக நிறுவனரின் ஜாமீன் மனு தள்ளுபடி

kaleelrahman

மதுரையில் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் இதயம் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமாரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் இயங்கி வந்த இதயம் என்ற காப்பகத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டன. இதுதொடர்பாக காப்பக நிறுவனர் சிவக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சிவகுமார் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, ஆணவங்களை முறைகேடாக தயார் செய்து குழந்தைகளை விற்பனை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.