தமிழ்நாடு

மதுரை: ஆதரவற்றவர்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கும் இளைஞர் குழு

மதுரை: ஆதரவற்றவர்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கும் இளைஞர் குழு

webteam

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆதரவற்றோர், முதியவர்கள் மற்றும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்கும் ஒரு இளைஞர் பாராட்டை பெற்று வருகிறார்.

கொரோனா 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் தடுக்கப்படுகிறது என்பது ஏற்புடையதாக இருந்தாலும், அதன் காரணமாக பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக நிற்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனை சரிசெய்யும் வகையில் அரசுடன் இணைந்தும் தனித்தும் பல தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசி என்பவர் அந்தப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஊரடங்கில் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றோர், முதியவர்கள் மற்றும் வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கி வருகின்றார். 

கொரோனா முதல் அலையின்போதே இதே நடவடிக்கையை முன்னெடுத்த இவர்கள் தற்போது மீண்டும் அந்த நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளனர். இவர்களின் இந்த முயற்சி அந்தப்பகுதி மக்களிடையே பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.