மதுரை திருநகரில் உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு பெற்ற ரயில்வே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் ரயில்வேயில் காவலராக பணியாற்றியவர் மாரிசாமி (72). கடந்த 2004ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், திருநகர் அருகே அமைதிசோலை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சளிதொல்லையால் அவதிபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் காலையில், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், திருநகர் பகுதியிலுள்ள மின்ஏற்றியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)