தமிழ்நாடு

மதுரை: கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர் உயிரிழப்பு

webteam

மதுரையில் கிருமிநாசினி தெளித்துக் கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மதுரை புதூர் பகுதியில் உள்ள போக்குவரத்து கழக சிப்காட் பணிமனையில் இன்று காலை நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் என்பவர் கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து, தமிழ்செல்வன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த புதூர் காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.