தமிழ்நாடு

அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

webteam

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாயிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஒற்றைத் தலைமை விவாகரம் தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில், அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,  அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது எனவும், காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.