தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார் மு.க.ஸ்டாலின்!

Veeramani

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையிலுள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “அனைவருக்கும் 74வது சுதந்திரதின நல்வாழ்த்துகள். சுதந்திர தின விழாவில் சாதி-மத-இன வேறுபாடு களைந்து, சமத்துவ உணர்வோடு அரசியல் சட்டத்தின் அனைத்து உரிமைகள் - நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாத்திட உறுதியேற்று, அண்ணா அறிவாலயத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.