தமிழ்நாடு

வீட்டிலேயே பிரசவம்.. எடைகுறைவாக பிறந்த குழந்தை.. உரிய நேரத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ்!

kaleelrahman

வீட்டிலேயே பிரசவம் பார்த்த வடமாநில பெண்ணின் ஆண் குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வடமாநிலத்தைச் சேர்ந் கமருதீன் - நசீமா பேகம் தம்பதியினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நசீமாக பேகத்துக்கு பிரசவவலி ஏற்பட்டு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.. குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததை அடுத்து 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர் சல்மான்கான் மருத்துவ உதவியாளர் பரத் ஆகியோர் குழந்தைக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து தாய் மற்றும் சேயை பத்திரமாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருததுவமனையில் சேர்த்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

உரிய நேரத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.