தமிழ்நாடு

தேசிய அளவில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

Veeramani

மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்

இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மது அருந்தும் கூடங்களை (BAR) மூடவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, மதுக் கடைகளையும் மூடவேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையட்டும்.

தீர்ப்பளித்த நீதிபதிக்கு எமது பாராட்டுகள். மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்