தமிழ்நாடு

குடிபோதை தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : 4 பேருக்கு ஆயுள்

webteam

புதுக்கோட்டை அருகே கடந்த 2011ம் ஆண்டு குடிபோதையில் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் செங்கலூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கிள்ளுகோட்டையைச் சேர்ந்த பெரியராசு, சின்னத்துரை, மூர்த்தி, கந்தவேல் ஆகிய நான்கு பேருக்கும் கடந்த 2016ம் ஆண்டு குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆத்திரமடைந்த 4 பேரும் கார்த்திகேயனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். 

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிந்து நீதிபதி ராஜலட்சுமி இன்று தீர்ப்பு வழங்கினார். வாய்த்தகராறு காரணமாக கார்த்திகேயனை கொலை செய்த சம்பவம் விசாரணையில் உறுதியானதையடுத்து சின்னத்துரை, பெரிய ராசு, மூர்த்தி, கந்தவேல் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.