தமிழ்நாடு

"ஆயுதங்களை துறப்போம், அறிவு சார்ந்த அரசியலை கையிலே எடுப்போம்!"- கருணாஸ் பேச்சு

kaleelrahman

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ கருணாஸ், அறிவு சார்ந்த அரசியலை கையிலே எடுப்போம்... ஆயுதங்களை துறப்போம் என பேசினார். 'தனிமரம் தோப்பாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தோப்பாக வேண்டுமென்று சொன்னால் 100 மரங்கள் வேண்டும். அதிலே ஒரு மரமாக நான் இருக்கத் தயார். எத்தனை பேர் அந்த தோப்பிலே மரமாக வளர்வதற்கு தயாராக இருக்கின்றீர்களே என்னோடு கைகோர்த்து வாருங்கள். எதிர்த்து நிற்போம். நியாயமான ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை முன்னெடுத்து வைப்போம். அறிவு சார்ந்த அரசியலை கையிலே எடுப்போம். ஆயுதங்களை துறப்போம். நமக்கான கோரிக்கைகளை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இனரீதியாக இருக்கக் கூடிய உறவுகளை நான் வரவேற்பேன்' என்றார்.