தமிழ்நாடு

சாஃப்டர் பள்ளிக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர்

Sinekadhara

நெல்லையில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழ்ந்த சாஃப்டர் பள்ளிக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளியில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், நாளை (18.12.2021) முதல் மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.