தமிழ்நாடு

குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற நந்தினி கைது

Rasus

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரை திரை மறைவில் இருந்து இயக்கி அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக கூறி ஆடிட்டர் குருமூர்த்தியின் சென்னை மயிலாப்பூர் வீட்டை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் உள்ள குருமூர்த்தியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போட்டப்பட்டுள்ளது. முன்னதாக மோடி எதை செய்ய உத்தரவிடுகிறதோ, அதனை நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு உத்தரவிடுவார். அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள். தமிழக அரசை ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி மறைமுகமாக இயக்கி வருதாக நந்தினி குற்றம்சாட்டியிருந்தார்.