தமிழ்நாடு

தமிழக அரசிடம் மழை நீரை சேமிக்கும் தொலைநோக்கு திட்டம் இல்லை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Sinekadhara

தமிழ்நாட்டில் மழைநீரை சேமிக்கும் தொலைநோக்கு திட்டம் 50 ஆண்டுகளாக இல்லாதது வேதனை அளிப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்கூட்டியே தூர்வாரியிருந்தால் மழை நீர் தேங்காமல் கடலுக்கு சென்றிருக்கும் எனக் கூறினார். மேலும், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.