தமிழக சட்டசபையில் ஜெய் ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் போன்ற முழக்கத்தை பாஜகவினர் எழுப்புவார்கள் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எல்.முருகன் கூறுகையில், ஜெய்ஹிந்த் என்ற தேச உணர்வை திருச்செங்கோடு எம்.எல்.ஏ, இழிவுப்படுத்தி உள்ளார் என்றும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். பிரிவினையை தூண்டும் வகையில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைப்பதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.