தமிழ்நாடு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 17-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

JustinDurai

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்ததன் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பள்ளி முன்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம்தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் சத்துணவு சமையலறையில் ஏற்பட்ட தீ, மேற்கூரையில் பற்றியதில் பள்ளிக்குழந்தைகள் 94 பேர் உயிரிழந்தனர். 13 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த துயர நிகழ்வின் 17-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள, குழந்தைகளின் புகைப்படங்கள் முன்பாக மலர்தூவியும், மெழுகுவர்த்திகளை ஏந்தியும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மறக்க முடியாத வடுவாக மாறிப்போன கோர விபத்தில் குழந்தைகளை இழந்தவர்கள், தங்கள் கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர்.