தமிழ்நாடு

பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக்கொலை!

Rasus

பிரபல ரவுடி சாலையின் நடுவே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ளது ஆட்டோ நகர். இங்குள்ள துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்கிற சிவானந்தம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது இவர் வீடுகளுக்கு தண்ணீர் கேன் விநியோகிக்கும் தொழில் செய்து வந்தார்.

இன்று காலை ஆட்டோ நகர் பகுதியில் சிவானந்தம் வந்த போது அவரது இருசக்கர வாகனத்தை வழி மறித்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சிவானந்தம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க, அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.