தமிழ்நாடு

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: கஜலெட்சுமி திருக்கோலத்தில் காட்சியளித்த அம்பாள்

kaleelrahman

திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று அம்பாள் கஜலெட்சுமி திருக்கோலத்தில் கமல வாகனத்தில் கோயில் வளாகத்தினுள் உலா வந்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் இக்காட்சிகள் யூ டியூப் வாயிலாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. குலசை தசரா விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.