நீட் தேர்வால் மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்பதால்தான், அதனை ஆதரிக்கிறேன் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அண்மைக்காலமாக கல்வியின் தரம் குறைந்துள்ளதாகவும், மாணவர்கள் நீட் தேர்வை விளையாட்டாக எண்ணாமல் படிக்க வேண்டும் என்றும் கூறினார். நீட் தேர்வால் மாணவர்கள் கல்வித்திறன் உயரும் என்றும், அதன்மூலம் அண்மை மாநிலங்கள் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் அளவிற்கு அறிவுத்திறனை பெறமுடியும் என்றும் குறிப்பிட்டார். சிலர் அரசியல் ஆதாயத்திற்காக மாணவி அனிதாவை தூண்டிவிட்டதாகவும், அவரின் மரணத்திற்கான பின்னணி பற்றி சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் புகார் தெரிவித்தார்.