தமிழ்நாடு

பிறந்த நாள், திருமண நாட்களில் போலீசாருக்கு விடுமுறை?

rajakannan

குடும்பத்தை மறந்து பொதுமக்களுக்காக பணியாற்றும் போலீசாருக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து மடல் அனுப்பும் திட்டத்தை கோவை மாநகர காவல்துறை அறிமுகம் செய்து உள்ளது. 

கோவை மாநகர காவல்துறை ஆணையாளரின் கீழ் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்தல் காவல் துறையினரின் பிறந்த நாள், திருமண நாள் தகவல்கள் திரட்டப்பட்டு, காவல் துறையினரின் இந்தச் சிறப்பு நாட்களில் அவர்களின் வீடுகளுக்கு கமிஷனர் கையெழுத்திட்ட வாழ்த்து மடல் அனுப்பப்பட உள்ளது. 

மேலும் பிறந்த நாள், திருமண நாட்களில் போலீசாருக்கு விடுமுறையும் அளிக்கப்படுகிறது. அவர்கள் தாங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மன இறுக்கம் குறைந்து பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.