தமிழ்நாடு

கதிராமங்கலம் போராட்டத்தில் பங்கேற்ற 5 பேருக்கு அவசர பிரிவில் சிகிச்சை

webteam

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேறக்கோரி கதிராமங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேறக் கோரியும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்கக் கோரியும் ‌70ஆவது நாளா‌க போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் கதிராமங்கலத்தைச் சேர்ந்த ஐந்து பேரும், அரியலூரைச் சேர்ந்த 2 பேரும் உண்ணாவி‌ரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று மாலை அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.