தமிழ்நாடு

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக கதிராமங்கலத்தில் 148ஆவது நாளாக தொடரும் போராட்டம்

webteam

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக கதிராமங்கலம் மக்கள் 148ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக 148ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. கிராமத்தை விட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அய்யனார் திடலில் 88ஆவது நாளாக மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கதிராமங்கலம் மக்கள் தெரிவித்துள்ளனர்.