தமிழ்நாடு

கச்சத்தீவு திருவிழா: தமிழக பக்தர்கள் 50 பேருக்கு இலங்கை அரசு அனுமதி

ஜா. ஜாக்சன் சிங்

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் அலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

கச்சத்தீவில் உள்ள பிரசித்தி பெற்ற அந்தோணியார் ஆலய திருவிழா வரும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனிடையே, பக்தர்கள் இன்றி இந்த திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த திருவிழாவில் பங்கேற்க இந்தியா, இலங்கயைச் சேர்ந்த 50 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.