தமிழ்நாடு

திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்

திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்

webteam

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநி தியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொண்டர்களும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

ஆனால், நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி யானது.நேற்று மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட் டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். ஆனாலும் தொண்டர்கள் இரவு முழுக்க காவேரி மருத்துவமனை வெளியே காத்திருந்து ‘ எழுந்து வா தலைவா’ என முழக்கமிட்டனர். 

தொடர்ந்து இன்று காலையும் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வெளியே காத்திருந்தனர். அவரது உடல்நிலை  கவலைக்கிடமாகவே உள்ளது எனக் கூறப்படுகிறது.