தமிழ்நாடு

"எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்திற்கு மெருகூட்டியவர் கருணாநிதி" - அமைச்சர் ஐ.பெரியசாமி

PT WEB

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மெருகூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ''எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தில் 75 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. மேலும், எம்.ஜி.ஆரின் திட்டத்திற்கு மெருகூட்டியவர் கருணாநிதி'' எனத் தெரிவித்தார்.