தமிழ்நாடு

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா

webteam

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட தங்களிடம் தண்ணீர் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூலை 11ம் தேதி வரை நாள்தோறும் விநாடிக்கு 2000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின்னர் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சித்தராமய்யா, கர்நாடகத்தின் தேவைக்கே அணைகளில் தண்ணீர் இல்லை; எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.