தமிழ்நாடு

அடையாற்றின் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம் 

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் அடையாறு ஆற்றின் மீது அமைந்துள்ள பால‌ம் வலுவிழந்த நிலையில் காணப்பட்டதால்,‌ பாலத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தற்காலிக பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இதன் காரணமாக திருமுடிவாக்கம் பல்லாவரம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர்.