தமிழ்நாடு

சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

webteam

 கமுதி அருகே இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈஸ்வரன், சோலைராஜ், சத்யா. இவர்கள் மூன்று பேரும் இருச்சக்கர வாகனத்தில் பார்த்திபனூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். கமுதி - மதுரை சாலையில் உள்ள வழிமரச்சான் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. 

இதில் ஈஸ்வரன், சோலைராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சத்யா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அபிராமம் போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.