தமிழ்நாடு

ஸ்ட்ராங் ரூம் குறித்து தேர்தல் ஆணையம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் - கமல்ஹாசன்

Sinekadhara

ஸ்ட்ராங் ரூம் குறித்து தேர்தல் ஆணையம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். 

வாக்கு எண்ணும் மையங்களில் மர்மமான விஷயங்கள் நிகழ்வதால் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.