தமிழ்நாடு

ஞாநி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

webteam

பத்திரிகையாளர் ஞாநி மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் காலமானார். சென்னை, கே.கே.நகரில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் அவரது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், ”ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.