தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் முனீஸ்வர் நாத் பண்டாரி

EllusamyKarthik

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பதவியேற்றுக் கொண்டார் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி. சென்னை ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் அவர் தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.