தமிழ்நாடு

மத்திய அரசுடன் இணக்கம் ஏன்? ஜெயக்குமார் பதில்கள்

webteam

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

மீன் மற்றும் மீன் உணவுகளை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் இணையதளத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாநில அரசின் உரிமைகளில் எள் அளவும் பின்வாங்கவில்லை என்றார். மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதே தமிழகத்தின் வ‌ளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவதற்காகத்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.