தமிழ்நாடு

வங்கி முன்பு நின்ற கார் கண்ணாடியை உடைத்து நகைகள் கொள்ளை

webteam

வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த குங்குமம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று பல்லடத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு பல்லடம் காவல் நிலையம் எதிரே உள்ள செட்டிபாளையம் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்த உள்ளே சென்றுள்ளார்.

மீதி இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை காரின் உள்ளே வைத்து பூட்டி சென்ற நிலையில், மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது காரின் ஜன்னல் கண்ணாடி உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கார்த்திகேயன் பல்லடம் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.