தமிழ்நாடு

''ஓ.பி.எஸ் சொன்னது சரியே'' - ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி

கலிலுல்லா

சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரியே என்று அதிமுக அமைப்புச் செயலர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,''சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரிதான். அதிமுகவின் எதிர்கால நலனை சிந்திக்கக்கூடிய தலைமை நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை என நம்புகிறேன். 

ஓபிஎஸ் அவர்களின் நிலைபாடுதான் எனக்கும். எதிர்காலத்தில் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு இது. இதில் எந்த மாற்றமும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.